பல்லவி
ஸ்ரீ நாரத3 நாத3 ஸரஸீருஹ ப்4ரு2ங்க3 ஸு1பா4ங்க3
அனுபல்லவி
தீ3ன மான ரக்ஷக 1ஜக3தீ3ஸ1 2பே4ஸ1 ஸங்காஸ1 (ஸ்ரீ)
சரணம்
3வேத3 ஜனித வர வீணா வாத3ன தத்வக்3ஞ
கே2த3 ஹர 4த்ரி-தாப ரஹித 5கே2சர வினுத
யாத3வ குலஜாப்த ஸதா3 மோத3 ஹ்ரு2த3ய 6முனி வர்ய
ஸ்ரீ-த3 த்யாக3ராஜ வினுத ஸ்ரீ-கர மாம் பாலய (ஸ்ரீ)
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ஸ்ரீ நாரத3/ நாத3/ ஸரஸீருஹ/ ப்4ரு2ங்க3/ ஸு1ப4/-அங்க3/
ஸ்ரீ நாரதரே/ நாதமெனும்/ கமலத்தின்/ வண்டே/ மங்களமான/ அங்கங்களுடையவரே/
அனுபல்லவி
தீ3ன/ மான/ ரக்ஷக/ ஜக3த்3/-ஈஸ1/ ப4-ஈஸ1/ ஸங்காஸ1/ (ஸ்ரீ)
எளியோரின்/ மானத்தை/ காப்பவரே/ உலகத்திற்கு/ ஈசரே/ தாராதிபனுக்கு/ நிகரானவரே/
சரணம்
வேத3/ ஜனித/ வர/ வீணா/ வாத3ன/ தத்வக்3ஞ/
மறைகளில்/ உதித்த/ உயர்/ வீணை/ இசையில்/ தேர்ந்தவரே/
கே2த3/ ஹர/ த்ரி-தாப/ ரஹித/ கே2சர/ வினுத/
துன்பங்களை/ களைபவரே/ முவ்வெம்மைகள்/ அற்றவரே/ தும்புருவால்/ போற்றப் பெற்றவரே/
யாத3வ/ குலஜ/-ஆப்த/ ஸதா3/ மோத3/ ஹ்ரு2த3ய/ முனி/ வர்ய/
யாதவ/ குலத்துதித்தோனுக்கு/ இனியவரே/ எவ்வமயமும்/ களித்திருக்கும்/ இதயமுடைத்தவரே/ முனிவர்களால்/ வேண்டப்படுபவரே/
ஸ்ரீ/-த3/ த்யாக3ராஜ/ வினுத/ ஸ்ரீ/-கர/ மாம்/ பாலய/ (ஸ்ரீ)
சீர்/ அருள்வோரே/ தியாகராசனால்/ போற்றப் பெற்றவரே/ மங்களம்/ அருள்பவரே/ என்னை/ காப்பீராக/
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
மேற்கோள்கள்
2 - பே4ஸ1 - தாராதிபன் - மதி
3 - வேத3 ஜனித வர வீணா வாத3ன - வீணையின் சிறப்புகளைப் பற்றி இந்த web site-களில் நோக்கவும். வீணையின் பெருமை; நாரதரின் வீணை - மஹதி.
4 - த்ரி-தாப - முவ்வெம்மை - அத்தியாத்துமிக, ஆதிபௌதிக, ஆதிதைவிக.
6 - முனி வர்ய - ராமாயண காவியத்தினை இயற்றிய வால்மீகி முனிவருக்கும் அவரைப்போன்று மற்றும் பல முனிவர்களுக்கமு நாரதரே ஆசானாவார். நாரதரின் கதை. நாரத பக்தி சூத்திரங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை.
Top
விளக்கம்
1 - ஜக3தீ3ஸ1 - உலகிற்கீசரே - இந்த அடைமொழியை தியாகராஜர் பயன்புடுத்துவதன் நோக்கம் விளங்கவில்லை. கீதையில் கண்ணன் 'தேவ-ரு2ஷிகளில் நான் நாரதர்' (10:26) என்கிறான். என்றாலும் இந்த அடைமொழி பொதுவாக இறைவனுக்கு மட்டுமே பயன்படுத்தப்படுவது.
5 - கே2சர - தும்புரு - கந்தருவர் (வானோரின் இசைக் கலைஞர்கள்) தலைவன். ஹடயோகத்தில் கேசரி முத்திரை
யாதவ குலத்துதித்தோன் - கண்ணன்
Top